கொழும்பு துறைமுகத்தில் தீ; ஒருவர் பலி

வைப்பக படம்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 வயதான நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இன்று (08) அதிகாலை ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் உணவகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, பொலிஸார் மற்றும் துறைமுக தீயணைக்கும் பிரிவினர் இணைந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குறித்த தீயிற்கான காரணம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 


Add new comment

Or log in with...