சிறுநீரகப் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டான ஜனாதிபதியின் வன்னி இணைப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இதனை மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது. வன்னியில் தமிழ் மொழி பேசும் மக்களே அதிகமாகவுள்ள நிலையில் இவ் இணைப்பு அலுவலகத்தின் பெயர் பலகை தனிச் சிங்களத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரச அதிபர் திரேஸ் குமார், கிராம அலுவலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
Add new comment