கைதான ஜாலியவிற்கு எதிர்வரும் டிசம்பர் 02 வரை விளக்கமறியல் (Update)

 

றிஸ்வான் சேகு முகைதீன்

 

கைது செய்யப்பட்ட ஜாலிய விக்ரமசூரியவை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க டொலர் 3 இலட்சத்து 32 ஆயிரம் (332,000$) பண மோசடி இடம்பெற்றுள்ளதாக, பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

 

 


 

முன்னாள் அமெரிக்க தூதுவர் விமானநிலையத்தில் கைது

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய சித்ரான் விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (17) இரவு, இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாலிய இலங்கைக்கான தூதுவராக இருந்த போது, அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில், தூதரக கட்டடத்தை கொள்வனவு செய்தமை தொடர்பில், இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...