Sunday, November 13, 2016 - 3:43pm
றிஸ்வான் சேகு முகைதீன்
தனது மனைவி (32) மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளை கொலை செய்த கணவனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (13) காலை திருக்கோணமலை - கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த அசம்பாவிதத்தில் 08 மற்றும் 10 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தினால் தாக்கி குறித் மூவரையம் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
Add new comment