றிஸ்வான் சேகு முகைதீன்
கரையோர புகையிரத போக்குவரத்து பாதையில் இடம்பெறும் திருத்த வேலைகள் காரணமாக எதிர்வரும் 11ம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையான 05 நாட்களுக்கு கரையோ புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) இரவு 10 மணி தொடக்கம் செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் 4.00 மணி வரை மொரட்டுவை மற்றும் இரத்மலானைக்கிடையில் புகையிரத போக்குவரத்துகள் இரத்துச்செய்யப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவ மற்றும் இரத்மலானைக்கிடையில் காணப்படும் பழைமையான புகையிரத பாலத்திற்கு பதிலாக புதிய பாலமொன்றை அமைக்கவுள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வரும் அனைத்து புகையிரதங்களும் மொரட்டுவ புகையிரத நிலையம் வரையும், கொழும்பிலிருந்து வரும் புகையிரதங்கள் இரத்மலானை புகையிரத நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment