Wednesday, November 2, 2016 - 3:18pm
தேசிய புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் விஜேந்திர குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியில் இருந்த பிரிகேடியர் சுரேஷ் சலை, புலனாய்வு பிரிவு படையணி மத்திய நிலையத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இது குறித்து தெரிவிக்கையில், இராணுவத்தின் வருடாந்த இடமாற்ற விதிமுறைகளுக்கு அமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
Add new comment