Monday, October 31, 2016 - 10:52am
றிஸ்வான் சேகு முகைதீன்
கொழும்பை மையமாகக் கொண்ட குறுந்தூர சேவை, தனியார் பஸ் சேவையாளர்கள் இன்று (31) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடவத்தை - கோட்டை, கிரில்லவல - கோட்டை, கம்பஹா - கொழும்பு, நிட்டம்பு - கொழும்பு ஆகிய தனியார் பேருந்துகள் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தூர சேவை மற்றும் குறுந்தூர சேவை பஸ் சாரதிகளுக்கிடையில் கடந்த வியாழக்கிழமை (27) இடம்பெற்ற மோதலில் குறுந்தூரப் பயண சேவை சாரதிகள் சிலரை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிர்ப்புப் தெரிவித்தே அவர்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment