பொலிஸார் மீது வாள்வெட்டு: 'ஆவா' குழு பொறுப்பேற்பு

 

யாழ். சுன்னாகம் பகுதியில் பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்திற்கு ஆவா குண்டர் குழு (AAVA Gangster) எனும் வாள்வெட்டு அணி உரிமை கோரியுள்ளது.

நேற்று முன் தினம் (23) பகல் 2.30 மணியளவில் யாழ். பிரபல தனியார் பல்பொருள் அங்காடிக்கு முன்னால் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் மீதே வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் குறித்து அக்குழு வெளியிட்டுள்ளதாக நம்பப்படும் துண்டுப்பிரசுரங்கள்  யாழ் நகரப்பகுதிகளில் நேற்று (23) போடப்பட்டிருந்தன.

இந்த துண்டுப்பிரசுரத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலிசெலுத்துவதாகவும்

பல்கலைக்கழக மாணவர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாரின் மீதே தாம் தாக்குதல் மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் நிமல் பண்டார (52) மற்றும் பி.எஸ். நவரத்ன ஆகிய இரு பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகினர்.இந் நிலையில் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் இவர்களுக்கு சிகிச்சைகள் இடம் பெறுகின்றன.

எனினும் குறித்த துண்டுப்பிரசுரம் உண்மையானதா இல்லையா என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்பட்டுள்ளன.

(புங்குடுதீவு குறூப் நிருபர்)

 

 

 


Add new comment

Or log in with...