'Samsung Note 7' இற்கு ஶ்ரீலங்கனிலும் தடை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

பிரபல கையடக்கத் தொலைபேசி உற்பத்தியாளர்களான சம்சங் நிறுவனத்தின் புத்தம் புதிய கையடக்க சாதனமான சம்சங் நோட் 7 இன் பாவனையை இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஶ்ரீலங்கன் விமானசேவை தடை செய்துள்ளது.

உடனடியாக அமுலாகும் வகையில் (18) குறித்த கையடக்க சாதனத்தை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்தல் விடுத்துள்ளது.

குறித்த சாதனத்தை மின்னேற்றும்போது (Charge) அதில் தீப்பற்றுவது தொடர்பில் பல்வேறு நபர்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, உலகிலுள்ள பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் அதற்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சம்சங் நிறுவனமும் அதன் தயாரிப்பு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...