கொழும்புக்கு கடல் மண்; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

கொழும்பு துறைமுக நகர் திட்ட கட்டுமான பணிகளுக்கு மண் எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள மீனவர்கள் குழுவினர் கொழும்பு - சிலாபம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தற்போது, கொழும்பு - புத்தளம் புகையிரத வீதியின் நீர்கொழும்பு கல்கந்த புகையிரத பாதையை மறித்து ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - சிலாபம் பிரதான வீதியின் போக்குவரத்து மாத்திரமன்றி, புத்தளம் நோக்கிய புகையிரத சேவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


Add new comment

Or log in with...