நாடு முழுவதும் பிற்பகலில் மழை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

நாடு முழுவதும் இன்று (14) முதல் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பொழிவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், நாட்டின் கிழக்கு, வடக்கு, வட மத்திய, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (14) பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை பெய்வதற்கான வாய்ப்புக் காணப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சுமார் 50 மில்லி மீற்றர் (5cm) வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில் கடந்த ஏழு மாதங்கள் நிலவிய வரட்சியை அடுத்து, நேற்று (13) முதல் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...