கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய மாகாணசபை தேர்தலின் போது கொட்டகலை மற்றும் கினிகத்தேன பகுதியில் செந்தில்தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.கா குழுவினருக்கும் அமைச்சர் பி.திகாம்பரம் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற, இரு வேறு மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கினிகத்தேன மற்றும் ஹட்டன் பொலிஸாரால், ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே ஹட்டன் மாவட்ட பதில் நீதவான் எஸ்.கருணாகரன் இவ்வாறு உத்தரவிட்டார்.
அமைச்சர் பழனி திகாம்பரம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம். ராமேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான உதயகுமார், சக்திவேல், எம். ராமசாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை உள்ளிட்ட பலர் நீதிமன்றத்திற்கு ஆஜராகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - மு.இராசந்திரன்)
Add new comment