ஆட்பதிவு திணைக்களம் இடமாற்றம்; பணி இடைநிறுத்தம்

ஆட்களைப் பதிவு செய்து, ஆள் அடையாள அட்டைகளை வழங்கும் ஆட் பதிவு திணைக்களம் இடமாற்றப்படுவதால் நாளை (21) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (26) ஆகிய இரு தினங்களும் எவ்வித பணிகளும் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திணைக்களம், பத்தரமுல்லையிலுள்ள சுஹுருபாயவிற்கு இடமாற்றப்படுவதன் காரணமாக திணைக்களத்தின் கோப்புகள் பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வது தொடர்பான பணிகள் காரணமாகவே, இவ்வாறு அதன் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு புஞ்சி பொரளையில் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், கடந்த ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி சுஹுருபாயவிற்கு இடமாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த இடத்திற்கு, மேலும் பல திணைக்களங்கள் மற்றும் மக்கள் சேவை தொடர்பான அலுவலகங்களை இடமாற்றவுள்ளதாக அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஒரே இடத்தில் பல்வேறு சேவைகளை பெற முடியும் என்பதோடு, 
கொழும்பில் காணப்படும் போக்குவரத்து நெரிசல், வாகன தரிப்பிடம் மற்றும் ஏனைய சிரமங்களுக்கும் இது தீர்வாக அமையும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன் புதிய முகவரி
சுஹுருபாய,
ஶ்ரீ சுபுதிபுர வீதி,
பத்தரமுல்ல


Add new comment

Or log in with...