அமைப்பாளர் பதவியை துறக்கிறேன் - பந்துல அறிவிப்பு

 

றிஸ்வான் சேகு முகைதீன்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம பிரதேச அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

இன்று (21) பிட்டிபன பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தே,  அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான இவர், மஹிந்த அணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட குழுத் தலைமைத்துவத்திலிருந்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டளஸ் அளகப்பெரும நேற்று முன்தினம் (19) விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...