நடத்துனரிடம் சுக்கான்; முச்சக்கரவண்டி, வர்த்தக நிலையம் சேதம்

 

வெலிமடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ‘கெப்பெடிபொல’ டிபோவின் கட்டுப்பாட்டிலுள்ள பேரூந்து ஒன்றை இயக்கிய பஸ் நடத்துனர், கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ் மேலும் இரு வியாபார நிலையங்களிலும் மோதியதில் அவ்வியாபார நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுனர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதுடன் விபத் ஏற்படுத்திய பஸ் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிறிஷாந்தன்)

 


Add new comment

Or log in with...