நிந்தவூர் விபத்தில் ஒருவர் பலி; மரணத்தில் சந்தேகம்

 

நிந்தவூரில் இன்று (02) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட லத்தீப் அஷ்ரப் (42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் உடல், வீதியின் அருகிலுள்ள வாய்க்காலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் குறித்த வாய்க்காலிலிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் வாய்க்காலினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியதா அல்லது மற்றுமொரு வாகனம் அவர் சென்று மோட்டார்சைக்கிளை மோதியதால் வாய்க்காலில் வீழ்ந்து மரணித்தாரா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் உடல் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையை தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த நபர் எவ்வாறு மரணித்தார் என்பது குறித்து உடனடியாக அறிய முடியாதுள்ளதாகவும், உயிரிழந்துள்ள நபரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது, அவர் உயிரிழந்த நிலையிலேயெ காணப்பட்டதாகவும் தெரிவித்த வைத்தியசாலை அதிகாரி, பிரேத பரிசோதனைகளின் பின்னர் அது பற்றி அறிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். 

குறித்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(நிந்தவூர் குறூப் நிருபர் - சுலைமான் றாபி)


Add new comment

Or log in with...