நாமலுக்கு எதிரான வழக்கு இன்று

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டை முன்வைத்து, நாமல் ராஜபக்‌ஷ எம்.பிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று (25) இடம்பெறவுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழுல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, குறித்த தினத்தில் ஆணைக்குழுவுக்கு சமூகமளிக்கவில்லை என்பதோடு, அது தொடர்பில் எவ்வித விளக்கமும் தரவில்லை எனத் தெரிவித்து, குறித்த ஆணைக்குழுவினால், உச்ச நீதிமன்றில் கடந்த ஜூன் 30 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...