கிண்ணியா விபத்து; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

RSM

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கடந்த 06 ஆம் திகதி பெருநாள் தினத்தன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்தின் சந்தேகநபரான எம் .எஸ்.எம் பரூஸ் நேற்று 08 வெள்ளிக்கிழமை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை 22 வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் கடந்த 06 புதன்கிழமை வனவள இலாகா திணைக்கள கம்பி வேலி தூண் ஒன்றில் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் கிண்ணியா சூரங்கல் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அப்துல் சலாம் அசன் (54) என்பவர் உயிரிழந்தார் என்பதுடன் குறித்த விபத்தில் அப்துல் ஹமீத் பாரூக் (47) என்பவர் காயமடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

(திருமலை மாவட்ட விசேட நிருபர் - அப்துல் பரீட்)

 


Add new comment

Or log in with...