வேட்டையாடி பேஸ்புக்கில் பிரசூரித்த சந்தேகநபர் கைது

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

விலங்குகளை வேட்டையாடி, அது தொடர்பான படங்களை சமூக வலைத்தளங்களில் (பேஸ்புக்) பிரசூரித்த குற்றச்சாட்டு தொடர்பிலான பிரதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நக்கிள்ஸ் மலைத்தொடர் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குறித்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபருடன் குறித்த புகைப்படங்களில் காணப்படும் மேலும் 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று (03) காலை, வழக்கறிஞர் ஒருவருடன் பன்வில பொலிஸில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த வேட்டை தொடர்பில் பயன்படுத்திய அவர்களிடமிருந்த கைத்துப்பாக்கி மற்றும் வளி அமுக்க துப்பாக்கிகளையும் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...