Tuesday, June 28, 2016 - 1:30pm
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
கட்டுநாயக்க விமானநிலையத்தின் உட்பகுதியில் CCTV பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது (28) மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக விமானநிலையத்தின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் வந்த பயணிகள், விமானநிலையத்திலிருந்து வெளியேறவும், வெளிநாடு செல்வதற்காக வந்து பயணிகள் விமானத்தினுள் நுழைவதற்கும் முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment