கைக்குண்டு தாக்குதல் மூவர் பலி (Update)

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

கொஸ்வத்தை, தலங்கம பொலிஸிற்கு பின்புறமுள்ள வீதியில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

பெண் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட புறம்பான கோரிக்கை தொடர்பில், மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்ய வந்த குழுவினருக்கிடையில் ஏற்பட்ட சண்டையின்போதே குறித்த கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு, மற்றொருமொரு பெண் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 09 வயதான சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த ஆண், ஆலயமொன்றில் பூசகராக கடமையாற்றும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலங்கம பிரதேசத்தில் கைக்குண்டு வெடித்ததில் சம்பவ இடத்தில் மூவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...