வெளிநாட்டில் இருந்து பிரதமர் மோடி இந்திய முஸ்லிம்களுக்கு ரமழான் வாழ்த்து


ரமழான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், ரமழான் புனித மாதம் தொடங்கியுள்ளது. இத்தருணத்தில் முஸ்லிம் மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமழான் புனித மாதத்தில் நம்மிடையேயான சகோதரத்துவம் மேலும் வலுக்கட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை ஓங்கி வளரட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிரதமர் மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...