நெவில், திலிண கமகே CID இல்

 

Rizwan Segu Mohideen

றிஸ்வான் சேகு முகைதீன்

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட நெவில் வன்னியாரச்சி இன்று (07) இரகசிய பொலிஸில் ஆஜரானார்.

 

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாவலரான மேஜர் நெவிலின், அம்பாந்தோட்டை, மெதமுலனவிலுள்ள காணி ஒன்றில் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை, அனுமதிப்பத்திரிமின்றி யானைக் குட்டியை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக, கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள, முன்னாள் அலுத்கடை மேலதிக நீதவான் திலிண கமகே இன்று (07) இரகசிய பொலிஸார் முன்னிலையில் ஆஜரானார்.

 

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வாக்குமூலம் வழங்கும் பொருட்டே அவர், இரகசிய பொலிஸில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...