முன்னாள் மேலதிக நீதவான் சரண்

 
Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்
 
பதிப்பு 02
 
இதேவேளை இன்று (02) மாலை கங்கொடவில நீதிமன்றத்தினால், அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
 
ரூபா 5 இலட்சம் பணம் மற்றும் ரூபா 25 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிடுவதாக கங்கொடவில நீதவான் கணிஷ்க விஜேரத்ன தெரிவித்தார்.
 

பதிப்பு 01
 
கொழும்பு கோட்டை முன்னாள் மேலதிக நீதவான் திலிண கமகே, இன்று (02) பிற்பகல் சரணடைந்தார்.
 
அனுமதிப்பத்திரம் இன்றி யானைக் குட்டி ஒன்றை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்ததோடு, அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் சரணடைந்துள்ளார்.
 
இன்று பிற்பகல் தனது வழக்கறிஞர்களுடன் கங்கொடவில நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...