அரநாயக்க, புளத்கொஹுபிட்டிய; 16 சடலங்கள் மீட்பு

மாவனல்லை - அரநாயக்க, சிறிபுர, பல்லேபாக பிரதேசத்தில் நேற்று (17) ஏற்பட்ட கொடூரமான மண்சரிவில் மூன்று சிறு கிராமங்கள் புதையுண்டன.
 
இராணுவத்தினரும், மீட்புப் பணியாளர்களும் மேற்கொண்டு வரும் தேடுதல் பணயில் இன்று (18) காலை 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12715","attributes":{"alt":"","class":"media-image","height":"433","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த சம்பவம் இடம்பெற்றதை அடுத்து சுமார் 80 பேர் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"12716","attributes":{"alt":"","class":"media-image","height":"600","style":"font-size: 13.008px; line-height: 1.538em; width: 489px; height: 600px; float: left;","typeof":"foaf:Image","width":"489"}}]]இதேவேளை புளத்கொஹுபிட்டிய, களுபஹனவத்தே பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில், 6 லயன் வீடுகள் மண்ணில் புதையுண்டன. அதிலிருந்த 16 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர், தற்போது வரை 3 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
 
பொலிஸாரும், இராணுவத்தினரும் பொதுமக்களுடன் இணைந்து, தொடர்ந்தும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 

Add new comment

Or log in with...