புத் 64 இல. 33

நந்தன வருடம் ஆடி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரமழான் பிறை 23

SUNDAY JULY 12 2012

இலங்கை எல்லே சங்கம் மற்றும் கால்டன் ஸ்போட்ஸ் நெட்வார்க் நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய எல்லே போட்டியின் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அதனைப் பார்வையிடுவதற்காக வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எல்லே விளையாடிப் பார்ப்பதை படத்தில் காணலாம்.

ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் தலைவர்கள் காத்துவந்த

சிங்கள - முஸ்லிம் உறவிற்கு மு.கா தலைவரின் உரை பேரிடி!

கிண்ணியாவில் AHM அஸ்வர் எம்.பி. கவலை

காவியுடை தரித்த பயங்கரவாதிகள் எனும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் கருத்து இந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக பாரம்பரியத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சிங்கள -முஸ்லிம் நல்லுறவிற்கு விழுந்த பாரிய பேரிடியாகவே நான் கருதுகிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்றுத் தெரிவித்தார். கிண்ணியாவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலய திறப்பு விழா வில் கலந்து கொண்டுரையாற்றும் போதே அஸ்வர் எம்.பி இவ்வாறு கூறினார்.

விவரம் »

தமிழ் தேசிய உணர்வுகளுக்கு ஆளாகி அபிவிருத்தியை நாம் இழப்பதா?

கிழக்கு மக்களை சிந்திக்கக் கோருகிறார் பிரபா MP

கிழக்கு மாகாணசபை தேர்தல் என்பது அரசாங்கத்தை மாற்றும் தேர்தல் அல்ல. அது மாகாணத்தில் வாழும் மக்களின் அடிப்படை தேவை களான கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து போன்ற வற்றை பூர்த்தி செய்யும் நடவடிக் கைக்கான தேர்தலேயாகும். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இத்தேர்தலின் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணமுடியாது.

விவரம் »

மூன்று சபைகளை உள்ளடக்கியதாக அரசாங்கத் திணைக்களம் உருவாக்கம்;

வறுமையை ஒழிக்க அரசு புதிய திட்டம்

பாராளுமன்றத்தில் அமைச்சர் பசில் புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு

‘திவிநெகும’ வாழ்வெழுச்சி பொருளாதார திட்டத்தினை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்திணைக்களமொன்று உருவாக்கப் படவுள்ளது. இதற்கான சட்டமூலமொன்று வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் வறுமையை ஒழித்து தனியார், குடும்பம் மற்றும் குழுவினரை மையமாகக் கொண்ட வாழ்வாதார பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தச் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

விவரம் »

இனவாத ரீதியான பிரசாரத்தில் ஹக்கீம்!

நிரூபிக்கப்படின் அரசு நடவடிக்கை

கிழக்கில் இனவாத பிரசார நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் ஹக்கீம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன அடிப்படையில் பிரசாரம் செய்து வாக்குகளை பெறக்கூடாது என்பதும் அபிவிருத்தியையும் கொள்கையையும் விளக்கியே வாக்குகளை பெறவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

விவரம் »

கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தங்கத்தேர் திரு விழா சனிக்கிழமை (நேற்று) கோலாகலமாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேர் வீதி வலம் வருவதற்கு பக்தர்கள் சகிதமாக ஆலய வளவிலிருந்து புறப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்.

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.