புத் 64 இல. 32

நந்தன வருடம் ஆடி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரமழான் பிறை 16

SUNDAY AUGUST 05 2012

விமானப்படையின் சீனக்குடா விமானத்தளத்தில் 53 ஆவது படைப்பிரிவில் பயிற் சியை முடித்துக் கொண்ட 83 பைலட் உத்தியோகத்தர்களதும், 383 படை வீரர்க ளினதும் கண்காட்சி நேற்று அந்த விமானத்தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அணிவகுப்பை பார்வையிட்டபோது எடுத்த படம்.
(படம்: திருமலை மாவட்ட விசேட நிருபர் பரீட்)
 

முஸ்லிம் மக்களுடன் திடீரென முளைத்த நல்லிணக்கப்பாடு

உலகத் தலைவர்களை துணைக்கு அழைத்து இரா. சம்பந்தன் பேச்சு

தேர்தல் காலத்தில் மட்டுமே பிறக்கும் ஞானோதயம்

“முஸ்லிம் மக்களுடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருட னான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

விவரம் »

கபட நாடக ஆட்டமாம்; தாரை வார்க்கும் செயலாம்!

மு.கா வின் எழுச்சியை பொறுக்க முடியாத சிலர் ஊடகங்களில் பிதற்றல்

ஆட்சியை தீர்மானிப்பது நாமே என்கிறார் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இந்த அரசை ஏமாற்றி கபட நாடகம் ஆடியே தனியாகப் போட்டியிட களமிறங் கியுள்ளதாக ஒருவர் ஊடகங்களுக்கு உளறுகின்றார். மஹிந்த ராஜபக்ஷவோடு ஒப்பந்தம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளை தாரை வார்ப்பதற்கே மு.கா தனித்துப் போட்டியிடுவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

விவரம் »

வடக்கில் கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தையே சீராக நடத்த முடியாத நிலையில் தமிழ் கூட்டமைப்பு;

கிழக்கு மாகாண அதிகாரத்தை கோரி நிற்பது வேடிக்கையானது!

அரச எதிர்ப்பு அரசியலை தொழிலாக நடத்துபவர்களால் அரச நிர்வாகத்தை கையாள முடியுமா?

முஸ்லிம்களை அன்று உதறித்தள்ளியவர்கள் இன்று அரியாசனம் ஏறுவதற்காக அவர்களை அரவணைக்க ஆசை வார்த்தை கூறி வருவதாகவும் விசனம்

சாதாரண உள்ளூராட்சி மன்றங்களில் கூட அரசின் நிர்வாகப் பொறிமுறையைச் சரியாகக் கொண்டு நடத்த முடியாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மாகாண நிர்வாகத்தைக் கோருவது எந்த விதத்தில் நியாயமாகுமென்று புத்தி ஜீவிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

விவரம் »

தேசிய செயல்திட்டத்திற்கு ஸிஷிதி வரவேற்பு;

ஜனாதிபதியின் இராஜதந்திர வெற்றிக்கு பாபுசர்மா பாராட்டு

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக் கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந் துரைகள் தொடர்பான தேசிய செயற் பாட்டு ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் தலைமையில் நியமித்திருந்தார். இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இத்திட்டத்தை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

விவரம் »

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதே ஆரோக்கியம்;

ஒரு தமிழனை முதலமைச்சராக்குவதன் மூலமே ஊடுருவல் அரசியலுக்கு ஆப்பு

தமிழரை ஒன்றுபட பிரதியமைச்சர் முரளிதரன் அழைப்பு

தமிழ் மக்கள் மத்தியில் தற்போதுள்ள சில அரசியல்வாதிகளின் ஊடுருவலை இல்லாமல் செய்ய வேண்டுமானால் அரசாங் கத்துடன் இணைந்து செயற் படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முத லமைச்சராக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 5 முஸ்லிம்கள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.

விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.