புத் 64 இல. 27

நந்தன வருடம் ஆனி மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 11

SUNDAY JULY 01 2012


200 இலட்ச ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி வட்டக்கச்சி இணைப்பு பாலத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார். இவ்வைபவத்தில் அமைச்சர் சி.பி.ரட்ணாயக்க மு.சந்திரகுமார் எம்.பி, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். (படம்: ஆ. தமிழ்ச்செல்வன்)

 

இணைந்து போராடுவோம் என்பது மேடை பேச்சில் மட்டுமே;

தீர்வில் பங்கு கேட்கும் தரப்பினர் போராட்டத்தில் பங்கேற்பதில்லையே!

மக்கள் தயார்; தலைவர்கள் தயக்கம் என்கிறார் மனோ

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும், தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமைக் கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தும் போராட் டங்களிலும் பங்கு பெற வேண்டும். உண்மையில் அதற்கு போராட

விவரம் »

கிழக்கு மாகாண சபை தேர்தல்;

தலைவர் நாடு திரும்பியதும் SLMC இறுதி முடிவு

ஊகங்களுக்கு அஸ்லம் MP ஆப்பு

எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் எதனடிப்படையில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வெளிநாடு சென் றுள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியதும், இதுகுறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் பொருளாளரும், எம்.பி. யுமான அஸ்லம் மொஹமட் சலிம் தெரிவித்தார்.

விவரம் »

நீதிமன்ற சட்ட உத்தரவையும் மீறி பொய்யான, நெறிமுறையற்ற பிரசாரங்களில் நேரடி ஈடுபாடு

இரு இணையங்களுக்கு சீல்!

பிரபலமான நபர்கள் குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டு

நீதிமன்ற உத்தரவையடுத்து CID பணியக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

இலங்கை தொடர்பான பொய்யானதும் நெறி முறையற்றதுமான பிரசாரங்களை மேற்கொள்வதில் சம்பந்தப்பட்ட, இரு இணையத்தளங்கள் இயக்கப்பட்ட அலுவலகமொன்றுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சீல் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது,

விவரம் »

வரலாறு தெரியாத மனோவின் ஏற்கமுடியாத கூற்று;

போராட்டத்தில் பங்குபற்றியது மட்டுமல்ல வேதனைகளையும் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள்

பங்கு கேட்க சகல உரிமையும் உள்ளது என்கிறார் பைசல் MP

இனப்பிரச்சினையில் தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்ட அளவுக்கு குறைவில்லாத வகையில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப் பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார். முஸ்லிம்கள் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாது தீர்வில் பங்கு கேட்பது நியாயமற்ற தென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருப் பது ஏற்றுக்கொள்ளமுடியாத கூற்று எனவும் அவர் குறிப்பிட்டார்.

விவரம் »

மேனனின் வருகையால் பூரிப்படைந்த கூட்டமைப்பு!

இந்தியாவை நம்புவதாக சம்பந்தன் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவின் ஈடுபாடு மேலும் நெருக்கமடை வதற்கான ஒரு படியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனின் இலங்கை விஜயத்தை தான் நோக்குவதாக தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். சிவ்சங்கர் மேனனை சந்தித்த பாரா ளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அதன்பின் கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.

விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.