புத் 64 இல. 23

நந்தன வருடம் வைகாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 12

SUNDAY JUNE 03  2012

மீண்டும் தலைதூக்கும் சம்பந்தனின் தனிநாட்டுக்கான அறைகூவல்;

தமிழரை அதலபாதாளத்திற்குள் இட்டுச்செல்ல முயற்சிக்கும் TNA

கடந்த கால அழிவுகள், இழப்புகளை ஞாபகப்படுத்தி அருண் தம்பிமுத்து எச்சரிக்கை

தமிழருக்கு விமோசனம் கிடைக்க தமிழ்த் தலைமைகள் இனியாவது அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழினம் அழிவுகளை சந்தித்த தேயொழிய விமோசனம் எதையுமே பெற வில்லை. தமிழ்த் தலைமைகள் மீண்டும் அதனை உயிர்ப்பித்து தமிழ் மக்களை அதல பாதாளத்துக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கின்றதா என மட்டக்களப்பு மாவ ட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப் பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு தலைவரின் ஆக்ரோ சமான பேச்சுக்களும் தனிநாட்டுக் கோரிக் கையை யொட்டிய அறை கூவல்களும் தமிழி னத்தின் எதிர்கால நலனுக்கு ஆரோக்கியமான தல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

விவரம் »

கூட்டமைப்பிற்குள் பிளவா? தலைவர் சம்பந்தன் மறுப்பு

TNA ஒரு ஜனநாயக கட்சி என விபரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித் துள்ளார். ஊடகங்க ளில் வெளி யிடப்படும் தகவல்களைப் போன்று கட்சியில் எவ்வித உட்பூசல்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவரம் »


கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் உலக தமிழ் இலக்கிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்றுக் காலை சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் தலை மையில் நடைபெற்ற போது பூவல் நூலின் முதற் பிரதியை வைத்திய கலா நிதி தாசிம் ஹகமது தலைவரிடம் பெற்றுக்கொள்வதையும் அருகில் இலக் கிய குழுச் செயலாளர் தி. ஞானசேகரன், பொதுச் செயலர் ஆ.ரகுபதி பாலா ஸ்ரீதரன் நிற்பதையும் படத்தில் காணலாம். (படம் : கே. பொன்னத்துரை)

 

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆலோக்க பூஜை இன்று

பொசன் பண்டிகையை முன்னிட்டு லேக் ஹவுஸ் நிறுவனம் வருடந்தோறும் நடத்தி வரும் மிஹிந்தலை ஆலோக்க பூஜை 50வது தடவையாக இம்முறையும் இன்று 3 ஆம் திகதி ஆரம்பமாகிறது. அபான்ஸ் நிறுவனத்தின் பங்களிப்புடனும் இலங்கை மின்சார சபையின் இணை அனுசரணையுடனும் இன்று மாலை 6.00 மணிக்கு மிஹிந்தலையில் இந்த ஆலோக்க பூஜை நடைபெறவுள்ளது.

விவரம் »

பாக் தோட்ட தொழிற்சாலை விவகாரம்;

நிர்வாகம் வாக்குறுதியை மீறியதால் தொழிலாளர்கள் மீண்டும் நிர்க்கதி

போராட்டத்தை கைவிட்டு மீண்டும் தொழிலுக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றம்

கந்தப்பளை பாக் தோட்ட தொழிற்சாலையை மீண்டும் திறப்பது தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

விவரம் »

யாழ். முஸ்லிம் இணையத்தள ஏற்பாட்டில் ‘வேர் அறுதலின் வலி’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்ற போது நூலின் முதற் பிரதியை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடமிருந்து புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர். (படம்: ஏ. எஸ். எம். இர்ஷாத்)
 

அரசியலுக்குள் பிரவேசித்து 42 வருடங்கள்;

ஜனாதிபதிக்கு பாபு சர்மா, ஹசன் மெளலானா வாழ்த்து

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலுக்குள் பிரவேசித்து 42 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஜனாதிபதியின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப் பாளர் பாபு சர்மாவும், முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் ஹஸன் மெளலானாவும் ஆசிச் செய்தி விடுத்துள்ளனர்.

விவரம் »

 

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.