இந்திய தூதுவருடன் அமைச்சர் நிமல் பேச்சு
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்குமிடையே வாரத்தில் 7 நாட்களும் விமான சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்பொழுது வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே விமான சேவைகள் இடம்பெறுவதாகவும் இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிலையில் யாழ். பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் இதற்கான கடன் வசதி கிடைத்ததும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Add new comment