கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று (03) சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

இலங்கை - இந்திய தொடர்பாளர் மணவை அசோகனின்  ஏற்பாட்டிலும் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமார் சிவலிங்கத்தின் தலைமையிலும் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவரின் முன்னிலையிலும் இந்நிகழ்வு நடைபெறும்.

மு.கருணாநிதியின் திருவுருவப்படத்துக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எம்.சிறிதர், தி.மு. மாணவர் அணித் தலைவர் எம்.நாகரத்திரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

சிறப்புரையை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றுவார். வாழ்த்துரைகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்து கலாசார முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.யோகராஜன் ஆகியோர் வழங்குவார்கள்.

 


Add new comment

Or log in with...