ஐக்கிய அரபு இராச்சியம்: இந்தியாவில் மற்றுமொரு துணை தூதரகம் திறப்பு

இந்தியாவுடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் மற்றொரு துணைத் தூதரக அலுவலகத்தைத் திறப்பதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது.

இந்த துணைத் தூதரக அலுவலகம் தென்னிந்தியாவின் ஹைதராபாத் நகரில் திறக்கப்படவுள்ளதாக அந்நாட்டின் இந்தியாவுக்கான கொன்சியூலர் ஜெனரல் ஆரெப் அல் நெளமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்தியாவுக்கான தூதரகம் புதுடில்லியில் அமைந்திருப்பதோடு மும்பாய் மற்றும் திருவணந்தபுரத்தில் இரண்டு துணைத்தூதரக அலுவலகங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி ஹைதராபாத்தில் புதிய துணைத் தூதரகம் திறக்கடவுள்ளது.


Add new comment

Or log in with...