கோட்ட மட்டத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

சாய்ந்தமருது கோட்ட மட்ட விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய சாய்ந்தமருது மல்ஹருஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி நஸ்லின் றிப்கா அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள் ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டியில் 43 மாணவர்கள் கலந்துகொண்டு அதில் 25 மாணவர்கள் வலய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர். சாய்ந்தமருது கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் இப் பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...