இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரணவின் வழிகாட்டலின் கீழ் இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின்  தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவினால் விமானப்படை தலைமையகத்தில் நேற்று (30) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரண பங்கேற்ப்பில்  பரிசளிப்பு வைபவம்  இடம்பெற்றது.

இதன்போது கடந்த வருடம் தரம் 05 புலமைப் பரீட்சையில்  சித்தியடைந்த இலங்கை விமானப்படையின் சேவையில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை சிவில் அங்கத்தவர்களின் பிள்ளைகள் 339 பேருக்கு விமானப்படை தளபதியினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை விமானப்படை தளபதி மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரினால் இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு  அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...