Thursday, March 30, 2023 - 9:18am
- சில இடங்களில் இடியுடன் மழை; முன்னெச்சரிக்கையாக இருக்கவும்
இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் அநுராதபுரம், கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Add new comment