பெருந்தோட்ட பிரிவினருக்கு வறுமை நிவாரணம் அவசியம்

சர்வதேச சமூகத்துக்கு மனோ தெரிவிப்பு

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான 'வறுமை நிவாரணங்கள்' பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை தொடர்பாக நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

அதற்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஏற்பாட்டில் எதிரணி எம்.பி.க்கள், இலங்கையிலிருந்து செயற்படும் அமெரிக்க, இந்திய, பிரிட்டன், ஜப்பான், கனடா, பிரான்சிய, நியூசிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலி நாட்டுத் தூதரகப் பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

உள்ளூராட்சித் தேர்தல்கள் பிற்போடப்பட்டமை தொடர்பாக இங்கே உரையாடப்பட்டது. அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பிற்போடப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்கள் பற்றி கேள்வி எழுப்பியமையை நான் வரவேற்கிறேன். அதேபோல், இந்திய பிரதித் தூதுவரும் தமது நாட்டின் நிரந்தர நிலைப்பாடாக மாகாணசபை தேர்தல்கள் இருக்கின்றது எனக் கூறினார். அதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன். உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் நடத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். உள்ளூராட்சி தேர்தல்கள் எவ்வளவு முக்கியமோ, அதேயளவு ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலும் முக்கியம் என்பது எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு.

 


Add new comment

Or log in with...