வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு

மனைவியுடன் செல்கையில் சம்பவம், இருவரும் ஆஸ்பத்திரியில்

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், படுகாயங்களுக்குள்ளான இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.கோப்பாய் - மானிப்பாய் வீதியிலமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு (16) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு பிரதேச சபை உறுப்பினரும் அவரது மனைவியும் ஆலயத் திருவிழாவொன்றில் கலந்துகொண்ட பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர்களை பின்தொடர்ந்த மூவர், அவர்களது வீட்டுக்கு முன்பாக வழிமறித்து மனைவி அணிந்திருந்த தங்கநகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினரும் மனைவியும் தங்கநகைகளை அறுப்பதை தடுப்பதற்கு கொள்ளையர்களுடன் போராடிய போது, அவர்கள் இருவர் மீதும் சரமாரியாக வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதேவேளை, கொள்ளையர்களுடன் போராடி தங்கநகைகளையும் அறுத்துச் செல்லாது காப்பாற்றிக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


Add new comment

Or log in with...