மேல், சப்ரகமுவ, வடமேல், தென் பகுதிகளில் பிற்பகலில் அல்லத இரவில் மழை

- மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை கரையோரங்களில் சிறிது மழை

இன்றையதினம் (17) நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...