இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், கொழும்பிலுள்ள தலைமையகம் மற்றும் யாழ்ப்பாணக் கிளையில் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடியிருந்தது. பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கும் பல்கலாசார ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குநராகத் திகழ்வதையிட்டு நிறுவனம் பெருமை கொள்கின்றது.
நிறுவனத்தின் நிறைவேற்று நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊழியர்களின் பிரசன்னத்துடன் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தைப்பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் பாரம்பரிய அம்சங்கள் பல இந்நிகழ்வில் அடங்கியிருந்தன.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் அனீஃவ் கருத்துத் தெரிவிக்கையில், 'நிறுவனத்தில் வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகியவற்றை ஊக்குவித்து, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை யூனியன் அஷ்யூரன்ஸ் மேற்கொள்கின்றது. இந்த அம்சத்தை கவனத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு நிகழ்வாக இது அமைந்திருந்தது' என்றார்.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது.
கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்களுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்டவண்ணமுள்ளது.
Add new comment