சீன வங்கியின் உத்தரவாதம் போதுமானது ஒன்றல்ல

அல் ஜசீரா பேட்டியில் அமைச்சர் அலிசப்ரி கருத்து

சீனாவின் எக்சிம் வங்கி வழங்கிய உத்தரவாதங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு போதுமானவையில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதற்கும் சீனா வழங்கியுள்ளமைக்கும் இடையில் இடைவெளியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அல் ஜசீராவிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், 2.9 பில்லியன் கடனுதவியை இலங்கைக்கு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்ற உத்தரவாதத்தினை கருத்தில் கொள்ளும் சீனாவின் வங்கி குறைவாகவே வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இது இரண்டுவிதமான நிலைப்பாடுகள். சீனர்கள் ஏதோ சொல்கின்றார்கள் ஆனால், சர்வதேச நாணய நிதியம் வித்தியாசமான முயற்சியை விரும்புகின்றது எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார். மார்ச் 31 ம் திகதிக்கு முன்னர் சீனாவின் உத்தரவாதமும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியும் கிடைப்பது அவசியம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், இல்லாவிட்டால் நிலைமை மோசமடையலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்அரசாங்கம் சீர்திருத்தங்களை தொடர்ந்தால் இலங்கை மக்கள் அமைப்பு முறை மீது தொடர்ந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தினால் வங்கிகள் ஊடாக பண பரிவர்த்தனையில் ஈடுபட்டால் மார்ச் 31ம் திகதிக்கு பின்னர் தட்டுப்பாடுகள் உருவாகலாம் என தான் கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருமான சேகரிப்பு மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் குறித்து தான் விதித்த முன்நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் விதம் குறித்து சர்வதேச நாணய நிதியம் திருப்தியடைந்துள்ளது எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...