CID யினரால் விசாரணை ஆரம்பம் − டிரான்
சீனத் தூதரக கடிதத் தலைப்பில் போலிக் கடிதம் வெளியாகியுள்ளமை தொடர்பில்,சீ.ஐ.டியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் தொகைகளுக்கு தவணை வழங்க முடியாதென அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் போலிக் கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக சீனத் தூதரக அதிகாரியொருவர் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
சீனத் தூதரகத்தின் அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் கடந்த (18) இடப்பட்டு இந்த போலிக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலுவைக் கடன்களுக்கு தவணை வழங்கப்பட முடியாதெனவும்,கொவிட்19 காரணமாக தமது நாடும் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் இந்தத் தகவல்கள் பொய்யானவையெனவும் அதிகாரபூர்வமான தகவல்களை மட்டும் கருத்திற் கொள்ளுமாறும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Add new comment