நாளை (21) முற்பகல் 11.00 மணி முதல் கொழும்பு 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 பகுதிகளில் 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.
நாளை (21) மு.ப. 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 9 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் கொழும்பு – தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்த, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, இரத்மலானை, கட்டுபெத்த ஆகிய பகுதிகளிலும் நாளை(21) இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 01 - 15 பெயர்கள் (Colombo 01 - 15 Names)
- கொழும்பு 1 - கோட்டை
- கொழும்பு 2 - கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
- கொழும்பு 3 - கொள்ளுப்பிட்டி
- கொழும்பு 4 - பம்பலப்பிட்டி
- கொழும்பு 5 - ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
- கொழும்பு 6 - வெள்ளவத்தை, பாமன்கடை
- கொழும்பு 7 - கறுவாத்தோட்டம்
- கொழும்பு 8 - பொரளை
- கொழும்பு 9 - தெமட்டகொட
- கொழும்பு 10 - மருதானை, பஞ்சிகாவத்தை
- கொழும்பு 11 - புறக்கோட்டை
- கொழும்பு 12 - புதுக்கடை, வாழைத்தோட்டம்
- கொழும்பு 13 - கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
- கொழும்பு 14 - கிராண்ட்பாஸ்
- கொழும்பு 15 - மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய
Add new comment