Tuesday, January 3, 2023 - 2:28pm
வடமேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
இன்று (03) முதல் இந்த நியமனம் அமுலுக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரஞ்சித் ஆரியரத்ன இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) விசேட தரத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment