- சட்ட மாஅதிபரின் உத்தரவுக்கு காத்திருப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) ஏற்பாட்டாளரான வசந்த முதலிகேவிற்கு நாளை (13) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட வசந்த முதலிகே, இன்று கொழும்பு மேலதிக நீதவான் தரங்க மஹவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கும் வரை அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த பிணை தொடர்பான கோரிக்கை கடந்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபரின் முடிவை அறிவிக்கும் வரை இன்று (12) விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment