கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 10 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை சனிக்கிழமை (10) 10.00 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபை  பிரதேசங்கள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கொட்டிகாவத்தை, முல்லேரியா, பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த காலப்பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க தேவையான நீரை முன்கூட்டியே சேகரித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.

 

 


Add new comment

Or log in with...