Wednesday, October 5, 2022 - 7:12pm
கம்பஹா ஸ்ரீபோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறவுள்ள 47ஆவது தேசிய விளையாட்டு விழா மரதன், நடை மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகளில் 800 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதற்கு நெஸ்டமோல்ட் வர்த்தகப் பெயரின் கீழ் நெஸ்லே லங்கா அனுசரணை வழங்குகிறது.
47 ஆவது விளையாட்டு விழாவை 31 விளையாட்டுகளைக் கொண்டதாக இம்முறை நடத்துவதற்கு விளையாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
Add new comment