ஓமானில் கிரிக்கெட் ஆட இலங்கையின் மூவர் தேர்வு

சாய்ந்தமருதைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஓமான் நாட்டிலுள்ள விளையாட்டுக் கழகமொன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தெரிவு செய்யப்பட்டு ஓமான் பயணமானார்கள்.

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த பல முன்னணி விளையாட்டுக்கழகங்களிலும், கல்வி கற்ற காலத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி கிரிக்கெட் அணியிலும் பங்கேற்று பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்த இவர்கள் பிரதேசமட்டம் , மாவட்ட மட்டம் , மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்திலும் கிரிக்கெட்  போட்டிகளில் ஆடியுள்ளனர்.

ஜே.எச். அப்லால் காரியப்பர் , எம்.சஜாத் , எம்.ஏ.எம்.றஸ்பாஸ் ஆகிய மூன்று இளைஞர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாளிகைக்காடு குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...