- சில ஊடகங்கள் விசமப் பிரசாரமென அக்கட்சி அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையமாட்டார்கள் என அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
சில ஊடகங்கள் இவ்வாறான விசமப் பிரசாரங்களை மேற்கொள்வதாகவும், அதில் எவ்வித உண்மையுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பிக்கள் சிலர் தீர்மானித்துள்ளதா என நாம் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ஹெக்டர் அப்புஹாமி உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் குழுவினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment