ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாக 40 பேரின் புகைப்படம் வெளியீடு

- விபரம் அறிந்தால் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவிப்பு

கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து முறையற்ற ஒன்றுகூடலை மேற்கொண்டு, அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் CCTV காட்சிகள் ஊடாக அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் இவ்வாறு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, சந்தேகநபர்கள் தொடர்பில் விபரம் அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

071-8591559
071-8085585
011-2391358
1997 (Hotline)

கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...