கிணற்றுக்குள் வீழ்ந்த யானை உயிருடன் மீட்பு

கருவலகஸ்வெவ பகுதியில் கிணற்றுக்குள் வீழ்ந்த யானை ஒன்றினை  பெகோ இயந்திரத்தின் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டு சரணாலயத்திற்குள் விரட்டப்பட்டது.

புத்தளம் - கருவலகஸ்வெவ மஹகோன்வெவ பகுதியில் சனிக்கிழமை  காட்டு யானையொன்று பாதுகாப்பற்ற முறையில் வெட்டப்பட்ட கிணற்றினுள் வீழ்ந்துள்ளதை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் கருவகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குச் சென்று கிணற்றுக்குள் வீழ்ந்த யானையை பார்வையிட்டு பெக்கோ இயந்திர உதவியுடன் கிணற்றுக்குள் வீழ்ந்த யானையை நீண்ட நேரத்திற்கு பின்னர்   உயிருடன் மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த யானை பின்னர் தப்போவ சரணாலயத்திற்குள் விரட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்


Add new comment

Or log in with...